Saturday, January 8, 2011

நிழல்


பிறந்தது முதல்
மண்ணில் புதையுரும் வரை
என்னுடன் இருப்பது
நீ மட்டுமே
ஒளியின் பிரகாசத்தில்
என் பின் மறைந்து
இருளின் குளுமையில்
அதனுடன் ஒன்றாகி கலந்து
கதிரவன் தோன்றி மறையும்
காலத்துகிடையே
வளர்ந்து தேய்ந்து வளரும் நீ
என்னுடன் ஒட்டிப் பிறந்த
என் இரட்டைப் பிறவியே....

             - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/1793/)

2 comments: