Wednesday, January 26, 2011

உன் நினைவுக‌ள்



கதிரவன் கண்விழித்த‌
விடியற்காலை தொட்டு,
தன் ஒளியை
சந்திரனுக்குத் தாரைவார்த்த
மாலை வரை
என் உள்ளமெல்லாம்
உன் நினைவே,
என் கண்கள் காணுகின்ற
காட்சிகளில் எல்லாம் நீயே..
என் செவிகள் கேட்பது
என்னுள் இருந்து
நீ உரைக்கும் வார்த்தைகளே..
இவ்வாறே
நான் உற‌ங்கினாலும்
உற‌ங்க‌ ம‌றுக்கிற‌து
உன் நினைவுக‌ள்
என் சுவாச‌த்தைப்போல‌...

- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_september2009.htm)

No comments:

Post a Comment