பசுமையில் முக்குளித்து
பட்சிகளை உள்ளடக்கி
முகில் முன்நின்று வழிநடத்தும்
மேக ஊர்வலத்தில்
சிரம் உயர்த்தி
காலத்தின் சாட்சியாய்
நீண்டு அகண்டு
உயர்ந்து கம்பீரமாக நிற்கும்
மலை சிகரங்களே
நீங்கள்
என்றுமே இயற்கையின்
பிரம்மாண்டம்
விண்ணை துளைத்து
வேற்று கிரகம்
ஆராயும் விஞ்ஞானியையும்
சிறு பிள்ளையாக்கி
பிரம்மிக்க வைக்கும்
திறந்தவெளி அருங்காட்சியகம் நீங்கள்.......
- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=310081510&format=html)
#நன்றி
திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=310081510&format=html)
அழகான ரசனை...
ReplyDelete