Tuesday, January 4, 2011

ம‌லைக‌ள்


ப‌சுமையில் முக்குளித்து
ப‌ட்சிக‌ளை உள்ளடக்கி
முகில் முன்நின்று வ‌ழிந‌ட‌த்தும்
மேக‌ ஊர்வ‌ல‌‌த்தில்
சிர‌ம் உய‌ர்த்தி
கால‌த்தின் சாட்சியாய்
நீண்டு அக‌ண்டு
உய‌ர்ந்து க‌ம்பீர‌மாக‌ நிற்கும்
ம‌லை சிகரங்‌களே
நீங்க‌ள்
என்றுமே இய‌ற்கையின்
பிர‌ம்மாண்ட‌ம்
விண்ணை துளைத்து
வேற்று கிர‌க‌ம்
ஆராயும் விஞ்ஞானியையும்
சிறு பிள்ளையாக்கி
பிர‌ம்மிக்க‌ வைக்கும்
திற‌ந்த‌வெளி அருங்காட்சிய‌க‌ம் நீங்கள்.......
                  - பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
திண்ணை இணைய இதழ்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=310081510&format=html)

1 comment: