Saturday, January 8, 2011
முதியோர்
கடந்து வந்த
நாட்களை
காலம் முகத்தில்
அச்சிடக்
காணவேண்டியவை எல்லாம்
தேடித்தேடிக் கண்ட
களைப்பில் பார்வை குன்ற
ஒடியோடி உழைத்து
உடலும் சோர்வு
அடைய
கம்பீரமாக எதிர்நோக்கிய
வாழ்கையை எண்ணங்கள்
அசைபோட
கால மாற்றங்களுக்கு
சாட்சியாய்
காலம் கற்றுத்தந்த
பாடங்களுக்கு பதிவேடாய்
நம் அனைவரின் இல்லங்களிலும்
ஓரமாய் தள்ளாடும்
அனுபவ அந்தாதி
படிக்கப்படாமலே...
- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)
#நன்றி
பதிவுகள் இணைய இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_january2010.htm)
முத்துக்கமலம் இணைய இதழ்( http://www.muthukamalam.com/muthukamalam_kavithai378.htm)
வார்ப்பு இணைய இதழ்(http://www.vaarppu.com/view/2037/)
Subscribe to:
Post Comments (Atom)
'கடந்து வந்த
ReplyDeleteநாட்களை
காலம் முகத்தில்
அச்சிடக் '...
'காலம் கற்றுத்தந்த
பாடங்களுக்கு பதிவேடாய்'..
'ஓரமாய் தள்ளாடும்
அனுபவ அந்தாதி'
முதிர்ந்த அவதானிப்பின் குறிப்புகள் கவிதையெங்கும் விரவிக் கிடக்கிறது... மிகவும் கவித்துவம் வாய்ந்த கவிதை... ஆழமான நுண்ணறிவு உருவகத்திலும்...
மாமலையின் பாராட்டுதலுக்கு இந்த மடுவின் நன்றிகள்
ReplyDelete